Total Pageviews

Tuesday, November 30, 2010

25.முதல்நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது.ஏன்?

      25.முதல்நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது.ஏன்?
           சித்தமருத்துவத்தில் நோயில்லாது வாழ முதல் நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது என கூறப்படுகிறது.இதற்கான அறிவியல் விளக்கத்தை காண்போம். 



                                  ஒரு வேளை சமைத்த       உணவினை மறுவேளை                             
உண்ணும்போது,சூடு செய்து சாப்பிடும் பழக்கம் ம்மிடையே உள்ளது.சூடு செய்யும்போது, நோய்கிருமிகள் அழிகின்றன என காரணம் கூறப்படுகிறது.ஆனால்,உண்மையில் அவை அழிந்தாலும் அவற்றின் நோய்பொருட்கள் அழிவதில்லை.

                   Listeria monocytogenes, Clostridium botulinum or Bacillus cereus போன்ற பாக்டீரியாக்கள் அதிகபட்ச வெப்ப நிலையில் அழிந்தாலும் இவற்றின் நச்சுப்பொருட்கள் அழிவதில்லை.
  


 Staphylococcus aureus பாக்டீரியாக்கள் heat-stable
Toxin கொண்டுள்ளன.இவை உணவு நஞ்சினை உருவாக்ககும்.

எனவேதான், முதல்நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது.

24.அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் செய்வது ஏன்?

24.அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் செய்வது ஏன்?

            சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட இரும்புசத்துமிக்க அன்னபேதியை சுத்தி செய்யும்போதும் மருந்தாக முடிக்கும் போதும் எலுமிச்சைபழச்சாறை பயன்படுத்தி செய்யப்படுகிறது.அதற்கான நவீன அறிவியல் விளக்கத்தினை காண்போம்.


              “The role of vitamin C in iron absorption” இக்கட்டுரையில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது குறித்து Hallberg L, Brune M, Rossander L. குறித்து தெளிவாக விளக்குகின்றனர்.
ஆதாரம்: PMID: 2507689 [PubMed - indexed for MEDLINE].





              இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது இரு காரணங்களை பொருத்தது.

              1.வலுவூட்டும் காரணிகள் - ascorbic acid, meat/fish
              2.தடை செய்யும் காரணிகள் - phytates, tannins




          
             இவற்றில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதில் ascorbic acid பணி உறுதிசெய்யப்பட்டுள்ளது, ascorbic acid இரண்டு வழிகளில் பணியாற்றுகிறது.

1.      insoluble and unabsorbable iron compounds உருவாகுவதை இது தடைசெய்கிறது.
2.      உடலில் விரைவில் அகத்துறிஞ்சப்படுவதான நிலையான
       ferrous iron நிலை உருவாக்கின்றது.

     எலுமிச்சை பழச்சாற்றில் ascorbic acid அதிகளவில் உள்ளதால்,விரைவில் அன்னபேதியிலுள்ள இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுகிறது.

எனவேதான், அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் பயன்படுத்தப்படுகிறது.

23.உருளை கிழங்கினை உண்ணும்போது சில வேளை ஒவ்வாமை ஏற்படுவது ஏன்?

23. உருளை கிழங்கினை உண்ணும்போது சில வேளை ஒவ்வாமை ஏற்படுவது ஏன்?


                உருளை கிழங்கில் உள்ள solanine, chaconine முதலிய glycoalkaloids விசத்தன்மை உடையவை. 


                இவை நோய்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க இயற்கையாக உருளை கிழங்கில் உள்ள வேதிபொருட்களாகும்.. 
                இவை glycoalkaloids பச்சை நிற திட்டுக்களை உருவாக்குகின்றன.

                     இவ்வகை நச்சுக்கள் கழிச்சல்,தசைபிடிப்பு,தலை வலி முதலியவறை உண்டாக்கி, நரம்பு மண்டல நச்சாக செயல் பட்டு பாதிப்பினை உருவாக்கின்றன. 
                  இவ்வகை நச்சுக்கள் தீவிர நிலையில் கோமா உருவாக்கி,உயிரிழப்பு வரை ஏற்படுத்துகின்றன.

         எனவேதான், உருளை கிழங்கினை உண்ணும்போது சில வேளை ஒவ்வாமை ஏற்படுகிறது.


  

Monday, November 29, 2010

22.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?

22.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?
                          ஜப்பானியர்களுக்கு prostate cancer ஏற்படும் வாய்ப்பு குறைவு. காரணம் 
என்னவெனில்,உணவில் அதிகளவில் சோயா பீன் சாப்பிடுவதே ஆகும்.        


                சோயாபீன் இசொபிளெவின் isoflavones இதுக்கு காரணம். 
சோயாபீன் இசொபிளெவின் பிரித்து எடுக்கப்படும் Equol என்கிற வேதிப்பொருளே புரதகோள வீக்க நோய் தோன்றுவதை தடுக்கிறது. 

              
                    மனிதர்களுக்கு தலை வழுக்கை baldness மற்றும் புரதகோள வீக்க நோய் prostate cancer தோன்றுவதற்க்கு காரணம் dihydrotestosterone என்கிற hormone. ஆண் இனப்பெருக்க hormoneகளில் ஒன்றான dihydrotestosterone அளவினை பாதிக்காமல்,அதன் செயல்களை மட்டும் Equol கட்டுப்படுத்துவதால் புரதகோள வீக்க நோய் prostate cancer  தோன்றுவதை தடுக்கிறது.


                     

                    எனவேதான், புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.

21.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?

21.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?
 
                                                                                                       தானிய வகைகளை அறுவடை செய்யும்போதும்,சேமித்து வைக்கும்போதும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.


       இவை மூலம் அத்தானிய வகைகளில் Aflatoxins என்கிற நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன,13 வகையான இவைகளில் பி1 வகை மிகவும் நச்சுத்தன்மை உடையது.


       இவை Aspergillus பூஞ்சையாலே உண்டாகின்றன.
  

       இவை DNA and RNA உருவாக்கத்திற்கு தேவையான protein உருவாவதை தடுக்கின்ற்ன.



     
மேலும் புற்று நோயையும் உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது.

       மேலும் ஈரல் நச்சாக செயல்படுகிறது. ஈரல் சிதைவு,காமாலை,வலி,வாந்தி,காய்ச்சல்,கைகால் வீக்கம் போன்றவை அறிகுறிகள் ஆகும்.



      எனவேதான் தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும்.

 

20.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?

20.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?
      ”    தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரையோ பார்க்காவசியம் இல்லை”.இது பழமொழ.ி  
         
     
.
         ”ஆப்பிள் விதைகளை மென்று தின்னும்போது உயிர் போகும் அபாயம் உள்ளது”.இது புது மொழி.

     

              ஆப்பிள் விதையில் அமைக்ளாடி Amygdalin என்ற நச்சுப் பொருள் உள்ளது.இது மனித குடலில் என்சைம்களுடன் வினைபுரிந்து hydrogen cyanide வாயுவை உண்டக்குகிறதே.இந்த வாயுதான் இரண்டாம் உலகப்போரின் போது உயிர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது. இது Cylon B எனப்பெயர் உள்ளது.



             இந்த வாயு சிறுகுடலில் உள்ள இரத்த அணுக்களை  பாதித்து, ஆக்சிசன் எடுத்து செல்லும் திறனை குறைக்கிறது.


விதைகளுடன்  


19.துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம் ?

19.துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம் ?

                  சித்த மருத்துவத்தில் விந்துகுறைபாடு நோய்க்கு துத்த நாகம் சேர்ந்த மருந்துகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.

இதனை என்கிற பதார்த்த குண சிந்தாமணி பாடல் விளக்குகின்றது. 

                         நவீன உடலியங்கியல் தத்துவப்படி,விந்தணுவில் துத்த நாகம் zinc level is about 135±40 micrograms/ml இருப்பதாக கூறப்படுகிறது.
    
                    மரபணு சம்பந்தமான செய்திகளை 
விந்தணுவில் சேர்ப்பதில் துத்த நாகம் முக்கிய செயல் உடையது. மேலும் விந்தணு உருவாக்கத்திலும் spermatogenesis முகிய பங்கு வகிக்கிறது.

                       எனவேதான், துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது.

  
 

18.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

              18.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

         

                    முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் goitrin, thiocyanate, and isothiocyanate போன்ற வேதிபொருட்கள் இருக்கின்றன.



இவை தைராய்டு சுரபியின் செயலை நிறுத்துவதுமட்டுமின்றி,அச்சுரப்பியை வீங்க காரணம்மகி,காய்டர்(goiter) உண்டாக்க கூடியவை.


                 எனவே இவைகளை அதிக அளவில் தைராய்டு நோயுள்ளவர்களும் சாப்பிடக் கூடாது.
    
 

17.தக்காளி பழத்தினை அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

17.தக்காளி பழத்தினை அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?

                              

தக்காளி பழத்தினை அளவுக்கு அதிகமாக உணவினிலே பயன்படுத்தினால் சிறு நீரக கற்கள்  உண்டாக வாய்ப்பு உள்ளது. 
மேலும் இதில் tomatidine, Glycoalkaloid என்ற Enzymes ஒவ்வாமையை ஏற்படுத்தி அரிப்பு, வாந்தி,மயக்கம்,தலை சுற்றல் செரிம்மான கோளறை ஏற்படுத்தி விடுமே.  

எனவே தக்காளி பழத்தினை அளவுக்கஅதிகம் உண்ணக்கூடாது.

16.மாலை வெயில் காய்தல் நல்லது. எங்ஙனம்?

16.மாலை வெயில் காய்தல் நல்லது. எங்ஙனம்?

  

             மாலை வெயில் காய்தல் பயன்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தேரன் சித்தர் ” வெயில் காய்ந்தார்க்கு எல்லா நோய்க்கூட்டங்களும் நீங்கும்” என தனது வெண்பா என்னும் நூலில் கூறியுள்ளார்.

             இன்றோ,ஆராய்ச்சியாளர்கள் மாலை வெயில் காய்தல் மூலம் உடலின் நீரிழிவைகுணப்படுத்தும் என்றும்,உடலிலுள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி அளவினை அதிகப்படுகிறதாகவும் ஆராய்ச்சி மூலம் நீருபிக்கின்றனர்.
  
              
    
                 
வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு : இந்திய மருத்துவர்கள் தகவல்

            புதுடில்லி : "சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது' என, இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும் "இன்சுலின்' ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. "இன்சுலின்' சுரக்க, "கால்சியம் மற்றும் விட்டமின் டி' அவசியம். இவற்றின் அளவு குறையும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்ந்து, "நீரிழிவு நோய்' ஏற்படுகிறது.

              
                 மாலை நேர வெயிலில் இருப்பதாலும் உடலில் "விட்டமின் டி' உற்பத்தி செய்யப்படுகிறது. புதுடில்லி போர்டிஸ் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் குழு ஒன்று இது பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரைக்கும், வெயிலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

           ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் அனூப் மிஸ்ரா இது குறித்து கூறியதாவது: இன்றைய அளவில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் மற்றும் விட்டமின் டி குறைபாடுகள் தான் இதற்கு காரணம்.


           மாலை நேரத்தில், வெயிலில் காய்பவர்களுக்கு அல்லது விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்பவர்களின் உடலில் விட்டமின் டி உற்பத்தியாகும் என கூறப்படுகிறது.  






         இது பற்றி, "போர்டிஸ்' மருத்துவமனையில் உள்ள 184 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 92 பேர் இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள்.

              ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பாலினம் மற்றும் உடல் எடை போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. அனைவரும் "விட்டமின் டி' குறைபாடு உடையவர்கள். மாலை நேரங்களில் இவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்தினோம். அதன்பின், அவர்கள் உடலில் "விட்டமின் டி' அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாலை வெயிலில் 30 நிமிடங்கள் இருந்தால், தேவையான "விட்டமின் டி' நமக்கு கிடைக்கும். இது பற்றி மேலும், தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
 
 

15.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்

15.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?

     
                     முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் இயற்க்கையான புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருட்களான 
 indoles, isothiocyanates, glucosinolates, dithiolethiones, and phenols அதிக அளவில் அடங்கியுள்ளது.  




                 குறிப்பாகவே, இதிலுள்ள sulforaphane வளர்சிதைமாற்றத்தினுடைய இரண்டாம் கட்ட என்சைம்கள்- phase-2 enzymes அளவில் அதிகம் உற்பத்தி செய்கிறது.





                                                                                                                       இவை  புற்று நோய் உண்டாக்கும் பொருட்களை தடை செய்து (preventing the formation of carcinogens in your body or by blocking cancer-causing substances from reaching or reacting with sensitive body tissues) உடம்பினை புற்று நோயிலிருந்து காக்கிறது.

                       எனவேதான,  முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.

14.குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருப்பது ஏன்?

14.குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருப்பது ஏன்?



               மூளைக்குள் நச்சுக்கிருமிகள்,பிற தேவையில்லாதவாகிய பொருட்கள் நுழைவதை தடுக்க இயற்கையாக மனிதனுக்கு உள்ள பாதுகாப்பு உறையே blood-brain barrier (BBB).

            இதன் பயன்பாடு குறித்து Paul Ehrlich ஆராய்ச்சி செய்தார்.இதன் முழு பயனை அவரது மாணவர் Goldman கண்டறிந்தார்.


   
               இதன் சிறப்பம்சம் என்னவெனின்,
இது, இதன் வழியே கொழுப்பில் கரையக்கூடியவனவாகிய பொருட்களை மட்டுமே அனுமதிக்கும். 
                 (the main constituent of cell membranes are lipids, it would seem that a molecule could only can get into the brain if it were lipid-soluble.),







           சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவில் இருப்பதற்கும் இதுவெ காரணமாக இருக்கமுடியும். 

           எனவேதான், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருக்கின்றதே.



13.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?

          13.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?


  
                கேசரி பருப்பில் ODAP என்ற oxalyl-L-α,β-diaminopropionic acid அதிக அளவு உள்ளது.

               இதற்கு β-N-oxalyl-amino-L-alanine, BOAA என்ற மற்றொரு பெயரும் உண்டு. 
              
              இது glutamate analogue neurotoxin ஆகும். கேசரி பருப்பினை அதிகம்  நாட்கள் உணவாக சாப்பிடும்போது,பக்க வாதத்தினை(paralysis) உண்டாக்கும்.

             உடலுடைய கீழ்பகுதி இயக்கம்(inability to move the lower limbs) மற்றும் செயல்கள்(lack of strength) முடங்கி போகின்றதே.
          
           கேசரி பருப்பினால் உண்டாகும் நச்சு நிலை லத்ரைசம்(lathyrism எனப்படுகிறது!இதன் முக்கிய குறிகுணம் குண்டிப்பகுதி தசை(gluteal muscles (buttocks) சுருக்கம் ஆகும்.

           மேலும் ODAP மைட்ட்டோகாண்டிரியாவில் நச்சாக செயல்பட்டு,இயக்க நரம்பு செயலிழப்புகளை (excess cell death in motor neurons) உண்டாக்கும்.

கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.

12. விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி விக்கலுக்கு சிறந்தது.எங்ஙனம்?

12. விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி விக்கலுக்கு சிறந்தது.எங்ஙனம்?
  
                  விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி சூரணமாக சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.

           இது எங்ஙனம் உடலில் செயல்படுகிறது என்பதை தெளிவாக அறிவோம்.





                                                    hi-cough

வாந்தி,விக்கல் ஏற்படுவதற்கு காரணமான கட்டுப்பாட்டு மையங்கள்(Regulating centres) மூளையில் உள்ளன. 


          மூளை திசுக்களில் Po2எனப்படுகிற ஆக்சிசன் அளவு குறைந்து Pco2
எனப்படுகிற கரியமில வாயு அளவு அதிகமாகும்போது,
 வாந்தி,விக்கல் ஏற்படுவதாக நவீன உடலியங்கியல் modern physiology கூறுகின்றது. 
           இவ்வாறு உயிர் வளி Po2 அளவு குறையும்போது மூளை கட்டுப்பாட்டு மையங்கள் தூண்டப்பட்டு, வாந்தி,விக்கல் உண்டு பண்ணுகிறது.

             மயிலிறகு சூரணமானது,மூளை திசுக்களில் P02 அள்வை அதிகரித்து, மூளை கட்டுப்பாட்டு மையங்களை தன்னிலைப்படுத்தி,வாந்தி விக்கல் வராமல் தடுக்கிறது.




Sunday, November 28, 2010

11.“பெருந்தாகம் எடுக்கினும் பெயர்த்து நீர் அருந்த்தோம்.”-ஏன்? கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.ஏன்?

11.“பெருந்தாகம் எடுக்கினும் பெயர்த்து நீர் அருந்தோம்.”-ஏன்?
கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.ஏன்?
   
                தேரன் பிணி அணுகாவிதியிலே,மிகு தாகம் ஏற்படும்போது அதிக அளவு நீர் அருந்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.அதே போல், கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்களும் வெறும் தண்ணீரை மட்டும் அதிக அளவு அருந்தக் கூடாது என்பதே வழக்கு.

      இவைகளுக்கான அறிவியல் விளக்கத்தினை காண்போம்:
                                                நவீன உடலியங்கியல் தத்துவப்படி,தாகம்,கழிச்சல்,அதி வியர்வை போன்ற நிலையில் உடலில் திரவ இழப்பு ஏற்படும்.அவ்வாறு, திரவ இழப்பு ஏற்படும்போது. உடலிலிருந்து உப்புச் சத்துக்கள்ம் வெளியேற்றப்படும்.

    இந்த சூழலில் வெறும் தண்ணீர் மட்டும் அதிக அளவில் குடிக்கும்போது,சிறு நீர் சுத்திகரிப்பு குழலில் உப்பை சம நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு திரவ இழப்பு மேலும் அதிகப்படும் நிலை உருவாகும்.



     சமயல் உப்பு, ORS எனச் சொல்லப்படும் உப்புச்சத்து கலந்த நீரை பருகும் வேளை,உடலின் உப்பு சத்து சம நிலையடைவது மட்டுமல்லாமல்,மேலும் திரவ இழப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது,

எனவேதான் கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.